ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்டுகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உச்சகட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்டுகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டியிருக்கிறது.

வரி பாக்கி நிலுவையில் இருப்பதாகவும், வருமானத்துக்கு குறைவாக கணக்கு காட்டியதாலும் 2 எஸ்டேட்களின் வங்கிக் கணக்கை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கோத்தகிரி ஈளாடாவில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உள்ள எஸ்டேட்களின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

மேலும், எஸ்டேட்களின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் 700க்கும் மேற்பட்ட எஸ்டேட்டில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்