கோடநாடு விவகாரம் – கார் உரிமையாளரிடம் விசாரணை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், வழக்கு விசாரணை தீவிரம்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய காரின் உரிமையாளர்கள் உட்பட இருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காரின் உரிமையாளர் நவசாத், புரோக்கர் நவ்ஃபல் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடை விதிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இதனிடையே, கோடநாடு சம்பவம் நடந்தபோது தப்பித்தவர்களை கூடலூர் சோதனை சாவடியில் பிடித்த, நீலகிரி காவலர் சத்யன், ஆய்வாளர் மீனாகுமாரிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்