இந்தியாவிலேயே முதல்முறையாக காய்கறிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்யும் திட்டத்தை கேரல அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டிலேயே முதன் முறையாக காய்கறிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்யும் திட்டத்தை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
அதன்படி இனி கேரள விவசாயிகள் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விலையில் இருந்து 20% அதிகமான விலையை கணக்கிட்டு அந்த காய்கறிகளின் விலை
நிர்ணயம் செய்யப்படும் என்றும் நவ.,1ந்தேதி இத்திட்டம் கேரத்தில் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக இணையதளம் வாயிலாக இத்திட்டத்தை முதல்வர் பினராயி அறிமுகம் செய்து வைத்த இத்திட்டத்தில் கேரள மாநில விவசாயிகள் உற்பத்தி செய்யும் 16 வகை காய்கறிகளின் விலையே இந்திய வரலாற்றில் அரசே நிர்ணயம் செய்கிறது.
இதனால் காய்கறிகளின் விலையை அரசே நிர்ணயம் செய்யும் முதல் மாநிலம் கேரளாவாகும்.இத்திட்டத்தால் இடைதரர்களின்றி விவசாயிகள் உற்பத்திக்கான
முழு பலனை பெறுவார்கள்.
சந்தைகளில் காய்கறிகளின் விலை குறைந்தாலும் கூட கூடுதலான விலையிலேயே விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் கொள்முதல் செய்யப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.காய்கறிகளை கொள்முதல் செய்யவும்,விற்பனை செய்யவும் உள்ளாட்சி அமைப்புகள் களமிரக்கப்பட்டுள்ளது.
என்றும் இத்திட்டத்தில் ஒரு பருவத்தில் 15 ஏக்கர்க்கும் அதிகமான காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு இத்திட்டம் மிகுந்த பலனளிக்கும்.
இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் காய்கறிகள் இத்திட்டத்தின் பட்டியலில் இருக்கிறதா என வேளாண்மைத்துறை இணையத் தளத்தில் தெரிந்து கொண்டு நவ.,1ந்தேதி முன் பதிவு செய்யலாம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் விவசாய துறையை மேம்படுத்த ஏரளமான முயற்சிகளை கேரள அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…