#BREAKING: வருமான வரி வழக்கில் கார்த்திக் சிதம்பரம் விடுவிப்பு..!

கடந்த 2015-ஆம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் கிடைத்த ரூ.7.37 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு கடந்த 2018-ம்  ஆண்டு வருமான வரித்துறை தொடர்ந்தனர். 

இந்நிலையில், இந்த வருமான வரி வழக்கில் கார்த்திக் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதியும் விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகள் முடிக்கும் முன்னரே வழக்கு பதிவு செய்தது செல்லாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

author avatar
murugan