கொம்பன் இயக்குனருடன் இணையும் கார்த்தி.!

இயக்குனர் முத்தையா  இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் மணிரத்னம் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, மேலும் இன்னும் சில தினங்களில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் கார்த்தி இந்த திரைப்படத்தை தொடர்ந்து சுல்தான் என்ற படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது, மேலும் இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் இருவரின் கூட்டணியில் வெளியான கொம்பன் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.