கர்நாடகாவுக்கு விமானம் மற்றும் ரயில்களை இயக்க தடை விதிக்கவில்லை – முதல்வர் எடியூரப்பா

கர்நாடகாவுக்கு விமானம் மற்றும் ரயில்களை இயக்க தடை விதிக்கவில்லை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், 4-ம் கட்டமாக போடப்பட்டுள்ள ஊரடங்கில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா கர்நாடகாவுக்கு விமானம் மற்றும் ரயில்களை இயக்க தடை விதிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா அதிகமுள்ள மாநிலங்களில் இருந்து குறைவான விமானங்களை இயக்க வேண்டும். கர்நாடகாவுக்கு விமான சேவை கூடாது என கூறவில்லை எனவும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.