பசுவைக் கொன்றவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை – குஜராத்தில் அதிரடி தீர்ப்பு!

இறைச்சிக்காக பசு மாட்டை கொன்றதற்காக குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கியுள்ளது. இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி வைத்து இருப்பவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்ததற்காக முஸ்லீம் ஒருவர் இந்து ஆதரவாளர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மாட்டை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் இந்து அமைப்புகள் மற்றும் பாஜக சார்ந்தவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கம்.

தற்போது , குஜராத் மாநிலத்தில் ஒரு நபர் பசு மாட்டை கொன்றார் என்பதற்காக புகாரின் பேரில், கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த நபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடும் தண்டனை வழங்கியுள்ளது.