அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் கர்நாடக அரசு பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகள்!

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் எதிரொலியாகக் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கர்நாடக அரசு பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஓசூரில் போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் பெரும்பான்மையான தமிழகஅரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் கர்நாடக மாநிலப் பகுதிகளுக்குப் பணிக்குச் செல்வோர் ஓசூரிலிருந்து கர்நாடக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் மட்டுமே செல்ல முடிந்தது. ஊத்தங்கரைப் பணிமனையில் இருந்தும் நாற்பதுக்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை…..
மேலும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. மற்ற அமைப்பினரையும், இயக்கங்களையும் போராட்டத்தில் இணைப்போம் என  தொழிற்சங்க கூட்டமைப்பு உறுதியாக தெரிவித்துள்ளது …
source: dinasuvadu.com

Leave a Comment