கன்னியாகுமரி காங்கிரசின் கோட்டை – விஜய் வசந்த்

தனது தந்தையின் கனவை நினைவாக்குவது தனது கடமை என்று மறைந்த எம்.பி.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட, மறைந்த எம்.பி.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் விருப்பமனு தாக்கல் செய்தார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், கன்னியாகுமரி காங்கிரசின் கோட்டை என்றும், ராகுல்காந்தியின் கன்னியாகுமரி வருகை தனக்கு எழுச்சியை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தனது தந்தையின் கனவை நினைவாக்குவது தனது கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.