தூத்துக்குடியில் கனிமொழி VS தமிழிசை: களத்தில் சந்திப்போம் வாருங்கள் என கனிமொழி சூளுரை!!

  • திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடப் போவது உறுதியாகி உள்ளது
  • பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதே தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடப் போவதாக செய்திகள் வந்துள்ளது

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது. திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்

மேலும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியுடன் மோத போவதாக செய்திகள் வந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து என்று பேசிய கனிமொழி… யாராக இருந்தாலும் களத்தில் பார்ப்போம் வாருங்கள் என்று சூளுரை விடுத்துள்ளார்.

author avatar
Srimahath

Leave a Comment