காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் டி.எஸ்.பி.தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென குவிப்பு!

13வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது நாளாக தொடர் போரட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளன.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் குடும்பத்தோடு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக வந்த தகவலையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் டி.எஸ்.பி.முகிலன் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்த எவ்வித முன் அனுமதி பெறவில்லாததால் போராட்டத்தில் ஈடுபடுவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபடவுள்ளனர்.திடீரென பேருந்து நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் ,பயனாளிகளிடையே பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது…
source: dinasuvadu.com

Leave a Comment