கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதிக்கக் கோரிய தந்தை கோரிக்கை நிராகரிப்பு.
கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை காவல்துறைக்கு பதில் வழக்கறிஞரிடம் ஒப்படைக்க உத்தரவிட இயலாது என்று மாணவியின் தந்தை ராமலிங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் உயர்நீதிமன்றம்.
செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க முடியாது, அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க தயார் என தந்தை ராமலிங்கம் கூறியுள்ளார். மாணவியின் செல்போன் பெற்றுக்கொள்ள அரசு வழக்கறிஞர் மறுத்ததுடன், விசாரணை அதிகாரிகளிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என திட்டவட்டமாக உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, மாணவியின் செல்போனை தாமதிக்காமல் காவல்துறையிடம் ஒப்படைக்க பெற்றோர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.