கார்த்தி – லோகேஷின் ‘கைதி-2’ ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் எதிர்பாரா சர்ப்ரைஸ்.!

பொங்கல் தினத்தை முன்னிட்டு கைதி 2 படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. விக்ரம் பட ஷூட்டிங் முடிந்து கைதி 2 பட ஷூட்டிங் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே முக்கிய இயக்குனராக மாறி நிற்கிறார். கார்த்தி, விஜய், கமல் மீண்டும் உலகநாயகனா அல்லது தளபதியா அல்லது தெலுங்கு நடிகரா, பாலிவுட்டா என எந்த படத்தை இயக்குவார் என சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அதற்கு முதற்காரணம் இவரது 2வது இயக்கமாக வெளியான கைதி. 2வது படத்தில் ஒரு ஆயுள் தண்டனை கைதி, ஒரு இரவில் நடக்கும் கதை, ஹீரோயின், பாட்டு எதுவும் இல்லை. ஆனால் படம் ஆரம்பம் முதல் சுவாரஸ்யமாக நகர்ந்திருக்கும்.

இந்த திரைப்படம் முடியும் போதே இதன் இரண்டாவது பாகத்தில் தான் முழு கதையும் தெரியும் வண்ணம் முடித்திருப்பார் இயக்குனர் லோகேஷ். அதனால் கைதி 2 எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆனால், உலகநாயகனின் விக்ரமை முடிந்துவிட்டு லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜயை வைத்து இயக்குவதாக இருந்தது. ஆனால், தற்போது வெளியான தகவலின் படி, விஜய் அடுத்து வம்சி இயக்கும் படத்தை முடித்து தான் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

விக்ரம் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அதனால், அடுத்து வரும் பொங்கலுக்கு கைதி-2 பட அறிவிப்பை அறிவித்துவிட்டு, விக்ரம் பட வேலைகள் முடிந்த பிறகு கைதி 2 ஷூட்டிங்கை ஆரம்பிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது அநேகமாக ககைதி 2 திரைப்பட அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.