#JustNow: தங்கமணி வீட்டில் ஆவணங்கள் குறித்து விசாரணை!

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் அவரது சொத்து ஆவணங்கள் சரிபார்ப்பு.

திருச்செங்கோடு அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சொத்து ஆவணங்கள் குறித்து வருவாய், பொதுப்பணித்துறை மற்றும் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பரில் தங்கமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்பு சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து விசாரித்து, அதனை மதிப்பீடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment