டெல்லியில் ஜூனியர் மருத்துவருக்கு இரண்டு முறை நெகட்டிவ்.! இளம் மருத்துவர் உயிரிழந்த சோகம்.!

டெல்லியில் ஒரு ஜூனியர் மருத்துர் அபிஷேக் பயானா என்பவருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது. ஆனால், அவருக்கு கொரோனா பரிசோதனையில் இரண்டு முறை நெகட்டிவ் என வந்த நிலையில் அவர் இறந்துவிட்டார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அபிஷேக் பயானா இறப்பதற்கு சில மணிநேரங்களில் முன் தனது மூத்த சகோதரர் அமனிடம், எனக்கு சுவாச பிரச்சினைகள் உள்ளது. என்னுடைய அறிகுறிகள் அனைத்தும் கொரோனாவுடன் ஒத்துப் போகின்றன. நான் 100% கொரோனா பாஸிட்டிவாக இருப்பேன் என நினைக்கிறேன் என கடந்த வியாழக்கிழமை காலை கூறி நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது..

author avatar
murugan