ஜேஎன்யு கொலைவெறி தாக்குதல்… அவர்களுக்குள்ளே அந்த கருப்பு ஆடு.. காவல்துறை ஆதாரத்துடன் விளக்கம்..

  • ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில்  கடந்த வாரம் 5ம் தேதி  மாணவர்கள் பேரணியில் புகுந்த மர்ம நபர்கள் போராட்டத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
  • இந்த தாக்குதலை நடத்தியது இடது சாரி மாணவர்களே என டெல்லி காவல்துறை அறிவிப்பு..

இந்த கொடூர கொலைவெறி  தாக்குதலால் போராட்டத்தில் கலந்துகொண்ட பலரும் காயமடைந்தனர். இதற்கு பல அமைப்புகளும் , அரசியல்தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக டெல்லி காவல்துறையினரும்  தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதன் விளைவாக  வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகத்திற்கு உரிய வகையில், 9 பேரின் புகைப்படங்களை டெல்லி காவல் துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Image result for delhi police proof jnu issue

இந்த விவகாரம்  தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், டெல்லி துறையின் தீவிர முயற்சியால் தற்போது உண்மை வெளிவந்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களின் படங்களை பார்க்கும் போது, இடதுசாரி மாணவர்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டது என்பது  தெளிவாகிறது. எனவே,  மாணவர்கள் போராட்டத்தை நிறுத்த வேண்டும். கல்வியை தொடங்கவும் , விசாரணைக்கும் ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டும். இந்திய பொதுத்தேர்தலில்,  இந்தியன் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள்இந்திய மக்களால்  புறக்கணிக்கபட்டன. அதனால் தான்  இடது சாரிகள் அவர்களின் நலனுக்காக மாணவர்களை பயன்படுத்துகின்றனர் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். இந்த விவகாரத்தில் இடதுசாரி ஒருவரே மாணவர் போராட்டத்தில் தாக்குதல் நடத்தியது மாணவ சமுதாயத்திடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

author avatar
Kaliraj