நகைக்கடை கொள்ளை – 6 தனிப்படைகள் அமைப்பு!

சென்னையில் நகைக்கடை பூட்டை உடைத்து 9 கிலோ நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு.

சென்னை பெரம்பூர் ஜே.எல். நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடுக்க 6 தனிப்படை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஜே.எல்.கோல்டு ஹவுஸ் நகைக்கடை பூட்டை உடைத்து 9 கிலோ நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க உதவி ஆணையர்கள் 3 பேர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

js gold

சென்னை பெரம்பூரில் நகைக்கடையில் ஷட்டரை வெல்டிங் வைத்து அறுத்து உள்ளே புகுந்து 9 கிலோ தங்க நகைகளை நேற்று நள்ளிரவு கொள்ளையடித்துள்ளனர். நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் முதலில் வெல்டிங் மிஷின் கொண்டு கடையின் கதவை துளையிட்டுள்ளனர். உள்ளே சென்ற அந்த கும்பல், நகை 9 கிலோ தங்க நகைகளையும், வைர கற்களையும் திருடி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

tnpolicechennai

இதனைத்தொடர்ந்து, சிசிடிவி காட்சி மூலம் கொள்ளையர்களை காவல்துறை வலைவீசி தேடி வருகிறது. இதுதொடர்பான விசாரணையும் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடுக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்களை விரைவில் பிடிப்போம்:

anbu

நகைக்கடையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கூடுதல் காவல் ஆணையர் அன்பு, நகைகலாய் கொள்ளையடித்தவர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவோம். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கக்கணிப்பு கேமராக்கள் மூலம் கண்டிப்பாக துப்பு கிடைக்கும். வெல்டிங் மிஷன் மூலம் கடை ஷட்டரை துளைபோட்டு 9 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment