ஜெயலலிதா நினைவு தினம் : நிமிர்ந்த நன்னடை…! நேர்கொண்ட பார்வை…! – சரத்குமார் ட்வீட்

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்.’ ஜெயலலிதா குறித்து நடிகர் சரத்குமார் ட்வீட்டர் பக்கத்தில் பதிவு. 

தமிழகத்தில், அதிமுகவின் பொதுச் செயலாளராக 6-வது முறை முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, உலகைவிட்டு மறைந்தார்.  இன்று அவரது 4-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது இணைய பக்கத்தில், ஜெயலலிதா குறித்து புகழ்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சரத்குமார் தனது, ட்வீட்டர் பக்கத்தில், ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்.’ என்ற பாரதியின் வரிகளுக்கு உதாரணமாக வாழ்ந்து மாபெரும் பெண் ஆளுமையாக மக்கள் மனதில் என்றும் உயர்சிறப்புடன் நிலைத்து நிற்கும் புரட்சித்தலைவி அவர்களின் 4-ம் ஆண்டு நினைவுநாள் வணங்குகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.