ஊழலில் ஊறிப் போயிருக்கும் ஜெயக்குமார் திமுகவைப் பற்றி விமர்சிக்க தகுதி , அருகதை இல்லை.! ஆர்.எஸ்.பாரதி.!

திருப்போரூரில் திமுக எம்.எல்.ஏ. துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டார். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், திமுகவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. அதேபோல் திமுகவினரை பார்த்து மக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என கூறினார்.

இந்நிலையில், திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளிட்டு உள்ளார். அதில், ஊழல், ரவுடித்தனம், கொடநாடு சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்குவது, கொடநாட்டில் கொள்ளை, கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையானோர்களை காப்பாற்றுவது போன்றவற்றின் பிறப்பிடமாக இருக்கும் அதிமுக ஆட்சியில் இடம்பெற்ற அமைச்சர் ஜெயக்குமார்  திமுகவை பார்த்து வன்முறை கட்சி என்று கூறுவது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீனவர்களின் உயிர் காக்கும் வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் செய்து கொள்ளையடித்து ஊழலில் ஊறிப் போயிருக்கும் ஜெயக்குமாருக்கு திமுகவைப் பற்றி விமர்சிக்க அடிப்படைத் தகுதி இல்லை, அருகதையும் இல்லை எனக் கூறினார். ரவுடிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள வானத்தை நோக்கி எம்.எல்.ஏ.வின் தந்தை சுட்டது திசை திருப்பப்பட்டுள்ளது. வானத்தை நோக்கி சுட்டதற்கு பொய் வழக்குப் பதிவு செய்து எம்.எல்.ஏ.வை கைது செய்யப்பட்டது திட்டமிட்ட சதி.

தாக்குதல் நடத்த வந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலத்தை அபகரிக்க நடைபெற்ற முயற்சி போல் அமைச்சர் பேசுவது உள்நோக்கத்தின் வெளிப்பாடு என கூறினார்.

author avatar
murugan