பேனா நினைவு சின்னத்தை எதிர்த்து ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் மனு!

பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் மனு.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்சநீதிமன்றமத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியதற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் மனு அளித்துள்ளார்.

பேனா சின்னத்திற்கு எதிராக மீனவர்கள் சார்பில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் தடை விதிக்க வேண்டும் என ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே, சென்னை மெரினா கடற்கரையில், கடலுக்கு நடுவே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கான வரைவு படத்தை சென்னை ஐஐடி நிபுணர் குழு தயாரித்துள்ளது. இதன்பின், மத்திய சுற்றுசூழல் வாரியத்தின் அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பித்து இருந்தது.

அதன்படி, சமீபத்தில் மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய சுற்று சூழல் வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதில், மீனவர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தது.

மேலும், மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அரசு அனுமதி கேட்டுள்ளது. அவர்களும் அனுமதி அளித்து விட்டால், அடுத்ததாக கட்டுமான பணிகள் தூங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பேனா சின்னத்திற்கு தடை விதிக்கக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்