பதவியை ராஜினாமா செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.!

 ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக பெருங்குடல் நோயால் பாதிக்கப்பட்டு வரும் ஷின்சோ அபே, இரண்டு முறை மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், காய்ச்சல் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது.

ஷின்சோ உடல் நலப்பிரச்சினைகள் காரணமாக  தனது ராஜினாமாவை வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்க உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து இருந்த நிலையில், டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஷின்சோ அபே பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

.ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்த பெருமையை பெற்றவர் ஷின்சோ அபே. இவரின் பதவி காலம் முடிவடைய இன்னும் 1 ஆண்டு இருக்கும் நிலையில், அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இடைக்கால பிரதமராக துணை பிரதமர் டாரோ அஸோ நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan