ராணுவ முகாமை தாக்கும் தீவிரவாதிகளின் முயற்சி முறியடிப்பு!

ஜம்முவின் சுஞ்சுவான்  மற்றொரு ராணுவ முகாமை தாக்கும் தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவின் சுஞ்சுவான் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்களும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற பகுதியில் இருந்து மேலும் ஒரு வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுஞ்சுவான் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஜம்முவின் ராய்ப்பூர் டோமனா பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமை தாக்கும் தீவிரவாதிகளின் முயற்சி இன்று காலை முறியடிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் விழிப்புடன் இருந்து பதிலடி கொடுத்ததால், பைக்கில் வந்த இரு தீவிரவாதிகள் தப்பிச்சென்றனர். அவர்களை வேட்டையாட, ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றின் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஸ்ரீநகரின் கரண் நகர் பகுதியில் சிஆர்பிஎஃப் முகாமை நேற்று அதிகாலை தாக்க முயன்று தப்பிஓடிய தீவிரவாதிகளை வேட்டையாட அங்கு இரண்டாவது நாளாக இன்றும் தேடுதல் நடைபெற்று வருகிறது. தேடுதல் வேட்டை நடைபெறும் பகுதியில் தொடர்ச்சியாக துப்பாக்கியால் சுடும் ஓசை கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரண் நகர் பகுதியில் நேற்றைய தேடுதல் வேட்டையின்போது தீவிரவாதிகள் சுட்டதில் வீரர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment