ஜம்மு காஷ்மீர் : லஷ்கர் இ தொய்பா முக்கியமான பயங்கரவாதி கைது …!

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியமான பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அஷ்முகாம் பகுதியில் ராணுவத்துடன் இணைந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவனை போலீசார் கண்டுள்ளனர்.

இவன் லக்ஷர் ஈ தொய்பா பயங்கரவாதி என அடையாளம் காணப்பட்டது. இதனை அடுத்து அந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் அப்துல்லா மாலிக் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடமிருந்து பிஸ்டல் மற்றும் ஏகே ரைபிள் 2 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Rebekal