இ-பாஸ் முறைக்கு தளர்வு அளித்தால் சவாலானதாக இருக்கும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

மத்திய அரசு அறிவித்தது போல் இ-பாஸ் முறைக்கு தளர்வு அளித்தால் சவாலானதாக இருக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

இதன் பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,கோவையில் 6,312 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா நோயாளிகளை கண்டறிய  தினமும் 100 காய்ச்சல் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மத்திய அரசு இ-பாஸ் தளர்வு அளித்திருப்பது சுகாதார துறையினருக்கு சவாலானதாக இருக்கும்.அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சித்தா மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.