#ஐடி ரெய்டு : வருமான வரித்துறையின் வலையில் சிக்கிய மோகன்லால் நகைகடை குழுமம்! இத்தனை கோடி மறைக்கப்பட்டதா?

ரூ.500 கோடி சொத்தை மறைத்த மோகன்லால் குழுமம்.

சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 32 இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில்,  மோகன்லால் நகைக்கடை குழுமத்தில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூ.500 கோடி சொத்து ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சோதனையில் வரி காட்டாமல், ரூ.400 கோடி மதிப்பிலான நகைகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 32 இடங்களில் நடந்த சோதனையில், கணக்கில் வராத 50 கிலோ தங்கம் வைத்திருந்தது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.