திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவுபெற்றுள்ளது.
திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். நேற்று முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய வருமானவரி சோதனை இன்று மாலை 5 மணியுடன் நிறைபெற்றது.
இந்த வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், வருமானவரி தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், தோல்வி பயம், அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடத்துகிறார்கள் என எ.வ.வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், நடைபெற்ற வருமான வரி சோதனையில் எந்த ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்படவில்லை என்றும் வருமானவரி சோதனை நடத்தினால் திமுகவின் வெற்றிக்கு பாதிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய எ.வ.வேலு தனது வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தியதாக தகவல் கூறப்பட்டது.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…