சென்னையில் மழை…மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்

தலைநகர் சென்னையில் மிதமாக  மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்தது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.

இந்நிலையில் அதிகாலை முதலே தலைநகர் சென்னையில் கிண்டி, வடபழனி, தி.நகர், மாம்பலம், விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துவருகிறது.வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

author avatar
kavitha