இலங்கை டூ சிங்கப்பூர்… இப்போ தாய்லாந்து.! தப்பில் ஓடும் கோத்தபய ராஜபக்சே.?

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராடினர். அரசு மாளிகைகள், முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. மேலும்,  சிலவை ஏற்றிக்கப்பட்டது.

அந்த சமயம், இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி, மாலத்தீவில் தஞ்சமடைந்தார். அதன் பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார்.

அவர் விரைவில் நாடு திரும்புவார் என இலங்கை அரசியல் வட்டாரம் கூறிவந்தாலும், அதற்கான எந்த அறிகுறியும் தற்போது வரை தெரியவில்லை.

மாறாக வேறு ஒரு செய்தி தான் வெளியாகி உள்ளது. அதாவது, கோத்தபய ராஜபக்சேவுக்கான சிங்கப்பூர்  விசா முடிவடைந்ததை தொடர்ந்து, அவர் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment