கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதம் மறைக்கப்படுகிறதா ? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதத்தை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதத்தை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை. வெளிப்படைத்தன்மையோடு அரசு செயல்பட்டு வருகிறது. தவறான குற்றச்சாட்டுகளை யாரும் கூற வேண்டாம் கேள்வி கேட்பது சுலபம்.களத்தில் இருந்து போராடும்போது தான் அதன் வலி தெரியும் என்று தெரிவித்துள்ளார்.