இந்த உணவுகளோடு இதை சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா.?

சில உணவுகளை மற்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடும் போது நம் உடலில் பல உபாதைகள் ஏற்படுகிறது. அது என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம்.

பாலுடன் சேர்க்க கூடாத உணவுப் பொருள்கள்

  1. பாலுடன் மீனை சேர்த்து  சாப்பிட்டால் ரத்தம் அசுத்தம் ஆகிவிடும் .நம் உடலின் நுண்ணிய பாதைகள் அடைக்கப்படும், சீரான ரத்த ஓட்டம் பாதிப்படையும்.
  2. சிலர் பாலுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவார்கள் இதனால் சளி அதிகரிக்கும்.
  3. தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் அருந்தக்கூடாது ஏனெனில் அது வாயு தொல்லையை உண்டாக்கும்.
  4. பாலும் முட்டையும் அதிக புரோட்டின்  உள்ளது இதை ஒரே நேரத்தை எடுத்துக் கொள்ளும் போது செரிமான தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
  5. பொதுவாகவே கீரைகள் ஜீரணமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் .இதில் டானின் இருப்பதால் பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது செரிமானம் பாதிக்கப்படும்.

தயிர்

தயிருடன் வருத்த உணவுகளை சேர்த்து சாப்பிடுவது பலருக்கு பிடித்தமான ஒன்று. உதாரணமாக உருளைக்கிழங்கு வருவல், மீன், கருவாடு போன்றவற்றை சேர்த்து சாப்பிடும் போது வெண்மேகம் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தேன்

தேனை சூடு படுத்தி எடுத்துக் கொண்டால் அதன் இயற்கையான சத்துக்கள் அழிக்கப்படுகிறது. தேனை நெய்யுடன் ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒருவேளை அப்படி எடுத்துக் கொண்டால் தேவையில்லாத கழிவுகள் ஒன்றாகி பல உபாதைகளை ஏற்படுத்தும்.

பழங்கள்

  1. பழங்களை தனியாக சாப்பிடும் போது தான் நன்கு ஜீரணமாகும். அதுவே பாலுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது செரிமான தொந்தரவை ஏற்படுத்தும்.
  2. பல சாலட்டுகளை சாப்பிடும் போது புளிப்பு மற்றும் இனிப்பு இரண்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் பித்தம் மற்றும் கபதில்   மாற்றம் ஏற்படும்.
  3. பப்பாளி சாப்பிட்ட பின் தண்ணீர் அருந்தக்கூடாது.
  4. வாழைப்பழத்தை தயிர் மற்றும் மோருடன்  எடுத்துகொள்ள கூடாது .

அசைவம்

  1. அசைவ உணவுகளை பால் மற்றும் எள்ளுடன்  சேர்த்து சாப்பிடக்கூடாது.
  2. ஒரே நாளில் சிக்கனையும் பன்றி இறைச்சியையும் சேர்த்து எடுத்துக் கொள்ளக்கூடாது. இதனால் குடலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல்வேறு நச்சுக்களை ஏற்படுத்துகிறது.
  3. சமைத்த உணவுகளை சமைக்காத உணவுகளுடன் இணைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஆகவே இந்த பதிவின் மூலம் எந்த உணவுடன் எதை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து பயன்படுத்தி நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.