#IPL2022Retention : தல தோனி, ஜடேஜா, ருதுராஜ்.! தெறிக்கவிட தயாராகும் சென்னை சிங்கங்கள்.!

கேப்டன் மஹேந்திர சிங் தோனி, ஜடேஜா, மெயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை அடுத்து வரப்போகும் ஐபிஎல் போட்டிகளுக்கு சென்னை அணி தக்கவைத்துள்ளது.

ஐபிஎல் ஆக்ஸன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பெங்களூரு, மும்பை, பஞ்சாப் போன்ற அணிகள் தங்கள் டீமில் உள்ள நட்சத்திர ஆட்டக்காரர்களை தக்கவைத்து அறிவித்து வருகின்றனர். பலருக்கு ஆச்சர்யம் இருக்கும். பலருக்கும் இவரை எடுக்கவில்லையா என அதிர்ச்சியும் கலந்திருக்கும்.

இந்த சூழ்நிலையில், நடப்பு சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் யாரை தக்கவைத்து கொள்ளப்போகிறது. யாரை ஏலத்தில் விட்டு எடுக்கப்போகிறது என ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அனைவரும் எதிர்பார்த்தது போலவும், சென்னை அணி நிர்வாகி ஏற்கனவே அறிவித்தது போல தல தோனி சென்னைக்காக தக்கவைக்கப்பட்டுள்ளார். மேலும், ஆல்ரவுண்டர் ஜடேஜா, மெய்ன் அலி, தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ருதுராஜ் ஆகியோரை சென்னை அணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது.

இவர்களை எடுத்தது போக மீதம் உள்ள தொகை கொண்டு மற்ற வீரர்களை சென்னை அணி நிர்வாகம் ஏலத்தில் எடுக்க உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.