ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு – பிசிசிஐ அறிவிப்பு

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது.  இதனால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

 இந்நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்க இருந்தது. இந்தப் போட்டிகளைக் காண மைதானங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மக்கள் கூடுவார்கள். எனவே வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதால் இந்தப் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

 கொரோனா தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 15க்கு பிறகும் தள்ளி வைக்கப்படும் என தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ, ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 15க்கு பிறகும் ஒத்திவைப்பது பற்றி இதுவரை முடிவு எடுக்கவில்லை என அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.