#IPL BREAKING: இஷான், சூர்யகுமார் யாதவ் மிரட்டல் அடி..! மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs MI போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, பஞ்சாப் அணியில் முதலில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய, பிரப்சிம்ரன் மற்றும் தவான் களமிறங்கினர். இருவரும் சிறிது நேரத்தில் களத்தை விட்டு  வெளியேறினர். அதன்பின், களமிறங்கிய லிவிங்ஸ்டோன் மற்றும் ஜிதேஷ் சர்மா அதிரடியாக விளையாடிய நிலையில், லிவிங்ஸ்டோன் அரைசதம் கடந்தார். இறுதியில், 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்துள்ளது.

இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியில், முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா, வந்த வேகத்தில் ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அவரையடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின், சூர்யகுமார் யாதவ் பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் விளாசினார். இறுதியில் டேவிட் மற்றும் வர்மா ஜோடி இலக்கை எட்டியது.

இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முடிவில், மும்பை அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்துள்ளது. மும்பை அணியில் அதிகபட்சமாக, இஷான் கிஷன் 75 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 66 ரன்களும், கேமரூன் கிரீன் 23 ரன்களும் குவித்துள்ளனர். பஞ்சாப் அணியில் நாதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.