IPL 2023: பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாகிறார் ஷிகர் தவான்.!

ஐபிஎல் இல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2023 சீசன் முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2022 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க் அகர்வால் தலைமை வகித்தார். மேலும் கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறாவது இடம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா அணியில் இல்லாத போது, ஷிகர் தவான் இந்திய ஒருநாள் அணிக்கு தலைமை வகித்து வெற்றிகரமாக செயல்பட்டார். மேலும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய அணிக்கும் தவான் கேப்டனாக செயல்பட உள்ளார். கடந்த 2022 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் ஷிகர் தவான்(460 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.

பஞ்சாப் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளதை பகிர்ந்துள்ளது. பஞ்சாப் அணியின் 14 ஆவது கேப்டன் ஷிகர் தவான் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar

Leave a Comment