IPL 2018:2 பந்துகள் மீதமிருந்த நிலையில் ராஜஸ்தான் த்ரில் வெற்றி !மும்பை அணி படு தோல்வி!

ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஐபிஎல் தொடரில் 21ஆட்டத்தில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மோதியது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

 

 

இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் அடித்தது.அந்த அணியில் அதிக பட்சமாக சூர்யகுமார் 72,கிசன் 58 ரன்கள் அடித்தனர்.ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஆர்ச்சர் 3,குல்கர்னி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.ராஜஸ்தான் அணிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

 

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 7 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.அந்த அணியில் அதிக பட்சமாக சஞ்சு சம்சன் 52,ஸ்டோக்ஸ் 40,கெளதம் 33 ரன்கள் அடித்தனர்.மும்பை அணியின் பந்துவீச்சில் பூம்ரா,பாண்டியா தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment