டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதியில் இணைய சேவை துண்டிப்பு!

டெல்லியில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும், காசிப்பூர், சிங்கு, திக்ரி ஆகிய பகுதிகளில் நாளை இரவு 11 மணி வரை இணையதள சேவை நிறுத்தம். 

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த 2 மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தினத்தன்று விவாசயிகள் மேற்கொண்ட டிராக்டர் பேரணியில், காவல்துறையினரும், விவசாயிகளுக்கும் இடையே  கலவரங்கள் ஏற்பட்டது.

இந்நிலையில், டெல்லியில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும், காசிப்பூர், சிங்கு, திக்ரி ஆகிய பகுதிகளில் நாளை இரவு 11 மணி வரை இணையதள சேவை நிறுத்தப்படுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறையின் காரணமாக, பாதுகாப்பு கருதி இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.