மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
சென்னை கிண்டியில் தூர்தர்ஷன் வழங்கும் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட தொழில், வர்த்தக நிறுவன பிரதிநிதிகள், மத்திய அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.
கட்டமைப்புகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியானது ரூ.5.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.7.5 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதில் ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார். சோசலிச திட்டத்தின் மூலம் நம்முடைய நாட்டிலேயே அரசு முதலீட்டில் உற்பத்தி கடந்த 60 ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்தது. ஆனால் அது முறையாக தொடரப்படவில்லை. சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டன என்றும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கோதாவரி -பெண்ணாறு-காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு பட்ஜெட்டில் இறுதி செய்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் தெரிவித்தார்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…