INDvsSA: அஸ்வின் சுழல்பந்தில் 431 ரன்களில் சுருண்ட தென்ஆப்பிரிக்கா..!

இந்தியா , தென்ஆப்பிரிக்கா அணிகள் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர்.முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில்  நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழந்து 502 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக ரோகித் 176 , அகர்வால் 215 ரன்கள் அடித்தனர்.
இதை தொடர்ந்து இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது. நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென்னாபிரிக்க அணி நேற்றைய ஆட்ட முடிவில் 8 விக்கெட்டை இழந்து 385 ரன்கள் குவித்து இருந்தது.
இதை தொடர்ந்து இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் தென்னாபிரிக்க அணி 431 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. அதிகபட்சமாக டீன் எல்கர் 160 , குவின்டன் டி காக் 111 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 7 விக்கெட்டை பறித்தார்.இதனால் 71 ரன்கள் வித்தியாசத்துடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி உள்ளது.

author avatar
murugan