INDvsNZ T20: இந்தியா-நியூசிலாந்து போட்டி மழையால் தாமதம்.!

இந்தியா-நியூசிலாந்து மோதும் மூன்றாவது டி-20 போட்டி மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.

இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டி-20 மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் 2 ஆவது டி-20 போட்டியில் சூர்யகுமார் யாதவின் அதிரடியால் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை சமன்படுத்தும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் இன்று களமிறங்குகிறது.

மூன்றாவது டி-20 போட்டி இன்று நேப்பியரில் நடைபெறுகிறது. இந்த நிலையில் மைதானத்தில் பெய்த மழையின் காரணமாக ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவது தாமதமாகி இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment