#INDvsENG : 4வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு ..?

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.  நேற்று நிறைவடைந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 23-ம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. இன்டர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கபட்டுள்ளது.

147 ஆண்டுகளில் முதல்முறையாக…ஜெய்ஸ்வால் உலக சாதனை..!

கடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் வேகபந்து வீச்சாளர் முகமது சிராஜிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது போல, 3வது டெஸ்ட் போட்டியில் பும்ராவிற்கும் ஓய்வு அளிக்கப்படுவதாக இருந்தது. அந்நிலையில்,  இந்திய அணியில் பந்து வீச்சாளரின் தேவை காரணமாக 3-வது டெஸ்ட் போட்டியிலும் பும்ரா விளையாடினார். பும்ரா இந்த தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி 13.64 சராசரிகளுடன் உள்ளார்.

நடைபெறவிருக்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் பும்ராவிற்கு பதிலாக இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது, முகேஷ் குமார் ரஞ்சி கோப்பையில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்க உள்ள 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர் இந்த டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment