இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி உணவு இடைவேளையின் போது 36/0 ரன்கள் குவிப்பு.
இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது.
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. வங்கதேச அணியை விட 254 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது. மூன்றாவது நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் குவித்துள்ளது.
கே.எல்.ராகுல் 20 ரன்களும், சுப்மன் கில் 15 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். இந்திய அணி 290 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.