INDvsBAN TestSeries: கில், புஜாரா சதத்துடன் இந்தியா டிக்ளர்! 512 ரன்கள் முன்னிலை.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 258/2 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.

இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. வங்கதேச அணியை விட 254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணியில் கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் குவித்த நிலையில் ராகுல் 23 ரன்களுக்கு கலீத் அஹ்மது பந்தில் ஆட்டமிழக்க புஜாரா மற்றும் சுப்மன் கில் இருவரும் வங்கதேச அணியின் பந்துவீச்சை சிதறடித்து வந்தனர்.

சுப்மன் கில் 110 ரன்கள் எடுத்த நிலையில் மெஹதி ஹசன் பந்தில் ஆட்டமிழந்தார். கில்லைத்தொடர்ந்து புஜாராவும் சதமடிக்க இந்திய அணி, வலுவான ஸ்கோரை எட்டியது, இதனால் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து 512 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளர் செய்தது.

அதிகபட்சமாக சுப்மன் கில் 110 ரன்களும், புஜாரா 102* ரன்களும் குவித்தனர். வங்கதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment