INDvsBAN TestSeries: 2-வது நாள் உணவு  இடைவேளை! இந்தியா 348/7 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது நாளில் உணவு  இடைவேளையின் போது இந்தியா 348/7 ரன்கள் குவிப்பு.

நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இரண்டாவது நாளில் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 34 ரன்கள் குவித்துள்ளது.

நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 278/6 ரன்கள் குவிந்திருந்தது. ஆட்டத்தின் கடைசி பந்தில் அக்சர் பட்டேல் ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் ஐயர் 82* ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஸ்ரேயஸ் ஐயர் 86 ரன்களுக்கு எபாடட் ஹூசைன் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் பார்ட்னர்ஷிப் 55* ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. 2-வது நாள் உணவு இடைவேளையில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள்; குவித்துள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment