#BREAKING: இந்திய -சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது..!

டெல்லியில் இந்தியா- சீனா இடையே வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியது.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருடன்  சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்சினை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு வீரர்களும் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இரு தரப்பு இராணுவ மூத்த அதிகாரிகள் தரப்பில்  பேச்சுவார்த்தை நடைபெற்றது.

author avatar
murugan