உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கிய பெரும் பரிசு “யோகா”- பிரதமர் மோடி

உலக நாடுகளுக்கு இந்தியா யோகா பயிற்சியை பரிசாக தந்துள்ளதாக பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து  நாடு முழுவதும் 3 கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் 3 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.  நேற்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதன் பின்னர் தற்போது நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி. அதில் பல்வேறு கருத்துக்களை நாட்டுமக்களுடன் பகிர்ந்து வந்தார். அதில் முக்கியமாக, உலக நாடுகளுக்கு இந்தியா யோகா பயிற்சியை பரிசாக தந்துள்ளதாக தனது உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.