இந்தியாவின் முதல் இ-ஆட்டோ சேவை -சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

மின்சாரத்தில் இயங்கும் இ-ஆட்டோ சேவையை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.இதற்கு முன்பாக அவர் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ சேவையை தொடங்கி வைத்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்த ஒப்பந்தம் செய்த அடிப்படையில், இந்தியாவின் முதல் இ-ஆட்டோ சேவையை சென்னையில் தொடங்கிவைத்தார். இ-ஆட்டோவை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை இயக்க முடியும். அதிகபட்சமாக இந்த ஆட்டோ 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக்கூடியது ஆகும்.கூடுதலாக இந்த இ-ஆட்டோவில்  கேமரா ,ஜிபிஎஸ் போன்ற கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் மாசுவை குறைக்கும் நோக்கில் இந்த இ-ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.