அமெரிக்காவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் இந்தியர்கள்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி முடிவுகள்!

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் 42 லட்சத்துக்கு மேலான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.  இவர்களின் நிலை குறித்து பால் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் என்ற அமைப்பு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பற்றிய ஆய்வு என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் முடிவுகள்  வெளியான நிலையில் இந்தியஸ்போரா உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மக்களில் பெங்காலி மற்றும் பஞ்சாபி மொழி பேசுபவர்கள் அதிகமாக வறுமையில் வாடுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனாவால், மூன்றில் ஒரு பங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பணியில் இல்லை என்றும்,  இந்த அதிர்ச்சியான அறிக்கையின் மூலம் மிகவும் பின்தங்கிய அமெரிக்க வாழ் இந்தியர்கள் மீது நாங்கள் கவனம் செலுத்துவோம் என, இந்தியஸ்போரா நிறுவனர் எம்.ஆர்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.