4 -வது போட்டிலும் வெற்றி வாகை சூடிய இந்திய சிங்கப்பெண்கள்.!

தற்போது ஆஸ்திரேலியாவில் மகளிருக்கான டி 20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய பெண்கள் அணி முதல் மூன்று போட்டிலும் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதையெடுத்து இன்று  இந்திய பெண்கள் , இலங்கை பெண்கள் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற இலங்கை பெண்கள் பேட்டிங் தேர்வு செய்தனர்.முதலில் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 113 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் இறங்கிய இந்திய அணி 14.4 ஓவர் முடிவில்  3 விக்கெட்டை இழந்து 116 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.இதனால் இந்திய அணி இந்த தொடரில் விளையாடிய 4 போட்டிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

author avatar
Dinasuvadu desk