4 நாள் சுற்றுப்பயணமாக நியூயார்க் செல்கிறார் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் 4 நாள் சுற்றுப்பயணமாக நியூயார்க் செல்கிறார்.

இன்று முதல் நான்கு நாள் சுற்றுப் பயணமாக இந்திய வெளியறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் அமெரிக்கா செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அங்கு, ஆப்கானிஸ்தானில் நடைபெறும் தலிபான்களின் தாக்குதல் குறித்து நியூயார்க்கில் பேச உள்ளதாகவும், ஐநா அதிகாரிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற கூடிய இரண்டு கூட்டத்தில் இவர் தலைமை தாங்கி பேச உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பயணத்தின் போது அமைதி காக்கும் தொழில்நுட்பத்திற்கான கூட்டாண்மை முயற்சிக்கு ஆதரவாக இந்தியா மற்றும் ஐ.நா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Rebekal