உலக குத்துச்சண்டை போட்டியில் முதல் முறையாக பதக்கம் வென்ற இந்திய வீரர்..!

ரஷியாவில் தற்போது 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி  நடைபெற்று வருகிறது.  உலக குத்துச்சண்டை போட்டியில் இறுதி போட்டிக்கு சென்ற முதல் இந்திய வீரர் அமித் பன்ஹால் என்ற சாதனையை பெற்றார்.

52 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷகோபிதின் ஸாய்ரோ உடன் அமித் பன்ஹால் மோதினார்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து ஆதிக்கம் செலுத்திய ஷகோபிதின் இறுதியில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் வெள்ளிபதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.

 

 

author avatar
murugan